விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்ததால் மத்திய அரசு தண்டிக்கிறது - முதல்வர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்ததால், மத்திய அரசு முழு அதிகாரம் கொடுக்காமல் தண்டிக்கிறது என, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்ததால் மத்திய அரசு தண்டிக்கிறது - முதல்வர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
x
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்ததால், மத்திய அரசு முழு அதிகாரம் கொடுக்காமல் தண்டிக்கிறது என, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஹரியானாவின் விவசாயிகளுக்கு ஆதரவாக அங்கே நடைபெறும் மகா பஞ்சாயத்து நிகழ்வில் பங்கேற்றார். அப்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்ததால், தங்களை தண்டிக்க, மத்திய அரசு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களுக்கு அதிகாரத்தை வழங்காமல் ஆளுநருக்கு அதிகாரத்தை வழங்கி உள்ளதாகவும், அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்