"இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்" - தம்பிதுரை கோரிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் - தம்பிதுரை கோரிக்கை
x
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க அதிமுக வலியுறுத்தியுள்ளது. 

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக இந்தியா ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக  குரல் கொடுக்க வேண்டும் என அ.தி.மு.க. எம்.பி தம்பிதுரை கோரியுள்ளார்.
மாநிலங்களவையில் பூஜ்ய் நேரத்தின் போது பேசிய தம்பிதுரை, ஜெனிவாவில் இன்று நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் வாக்கெடுப்பில், இந்தியா பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென  வலியுறுத்தினார்.
மேலும், அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி,  இந்தியா நிச்சயமாக தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் என உறுதி அளித்ததாகவும், அதன்படி இந்திய அரசு செயல்பட வேண்டும் எனவும் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்