இந்தியாவில் ஒரே நாளில் 46,951 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் ஒரே நாளில் 46,951 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
ஒரே நாளில் 46 ஆயிரத்து 951 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 1 கோடியே16 லட்சத்து 46 ஆயிரத்து 81ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒரே நாளில் 212 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 1 லட்சத்து 59 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 3 லட்சத்து 34 ஆயிரத்து 646 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நாடு முழுவதும் 4 கோடியே 50 லட்சத்து 65 ஆயிரத்து 998 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்