"காங்கிரஸ் மக்களை தவறாக வழி நடத்துகிறது" - பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி தற்போது மிகவும் பலவீனமடைந்து விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மக்களை தவறாக வழி நடத்துகிறது - பிரதமர் மோடி
x
காங்கிரஸ் கட்சி தற்போது மிகவும் பலவீனமடைந்து விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம், கரிம்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அசாமில் ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும்,  விவசாயிகளுக்கு பொருளாதார உதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார். தலைமையும், கொள்கையும் இன்றி காங்கிரஸ் கட்சி தற்போது மிகவும் பலவீனமடைந்து விட்டதாகவும்  பிரதமர் மோடி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியினர் யார் கூட வேண்டுமானாலும் கூட்டணி வைத்து  வாக்குகளை பெறுவதற்கு மக்களை தவறாக வழி நடத்தி வருவதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்