சபரிமலை கோவில் - பெண்கள் நுழைந்த விவகாரம்: "நடந்த சம்பவங்களுக்கு மன்னிப்பு கோருகிறேன்" - வருத்தம் தெரிவித்த கேரள அமைச்சர்
சபரிமலையில் பெண்கள் நுழைந்த விவகாரத்தில், கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலையில் நடந்த சம்பவங்கள் குறித்து மன்னிப்பு கோருவதாக கூறியுள்ளார். அது நடந்திருக்கக்கூடாது என்றும், இப்போது அது ஒரு மூடிய அத்தியாயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மீண்டும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், வேட்பாளராக அறிவித்த பிறகு, சபரிமலையில் விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்பது முதலைக் கண்ணீர் என, பாஜக கேரள மாநில தலைவர் சுரேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story