பவன் கல்யாணை ரசிகர்கள் சூழ்ந்ததால் வாக்குச்சாவடியில் பதற்றம்

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலில் நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.
பவன் கல்யாணை  ரசிகர்கள் சூழ்ந்ததால் வாக்குச்சாவடியில் பதற்றம்
x
ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலில் நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். உள்ளாட்சி தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, தெலுங்கு தேசம், ஜனசேனா பாஜக கூட்டணி கட்சி என மும்முனை போட்டி உள்ளது. வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் விஜயவாடாவில் உள்ள பதமன்லங்கா வாக்குச்சாவடிக்கு ஜனசேனா கட்சித் தலைவரான பவன் கல்யாண் வந்தார். வாக்களிக்க வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.



Next Story

மேலும் செய்திகள்