சூடுபிடித்துள்ள கேரள தேர்தல் களம் - வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம்

கேரள தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட அம்மாநில சபாநாயகர் மற்றும் 5 அமைச்சர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது.
சூடுபிடித்துள்ள கேரள தேர்தல் களம் - வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம்
x
கேரளாவிலும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. அண்மையில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில்,  சபாநாயகர், 5 அமைச்சர்கள், இரு முறைக்கு மேல் எம்.எல்.ஏக்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என கூறப்படுகிறது. இதுகுறித்து மாநில குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. மறுபக்கம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி  தொகுதி பங்கீடு  பேச்சுவார்த்தை நடத்துகிறது

Next Story

மேலும் செய்திகள்