"மேற்கு வங்க தேர்தலில் போட்டியில்லை" - சிவசேனா கட்சி அறிவிப்பு

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில், போட்டியிடப் போவதில்லை என, சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.
மேற்கு வங்க தேர்தலில் போட்டியில்லை - சிவசேனா கட்சி அறிவிப்பு
x
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில், போட்டியிடப் போவதில்லை என, சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து டிவிட்டரில் கரு​த்து பதிவிட்டுள்ள அக்கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத், சட்டப்பேரவை தேர்தலில், மம்தா பானர்ஜிக்கு, பூரண ஆதரவு அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலையில், பணபலம், ஆள்பலம் மற்றும் ஊடக பலத்தினை ஒன்றிணைத்துள்ள, சக்தியிடம், மம்தா பானர்ஜி மோதி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அதனை அவர் நிச்சயம் வெல்வார் என்றும், ஏனென்றால், மேற்கு வங்கத்தின் உண்மையான பெண் புலி மம்தா என்றும் சஞ்சய் ராவத் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்