கோயில் வளாகத்தில் யானைகள் பந்தயம் - துள்ளி குதித்து ஓடிய யானைகள்
கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் யானை பந்தயம் உற்சாகமாக நடத்தப்பட்டது.
கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் யானை பந்தயம் உற்சாகமாக நடத்தப்பட்டது. திரிச்சூரில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோயில் திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. ஆண்டுதோறும், திருவிழா தொடக்கத்தின் போது யானைகள் பந்தயம் நடத்தப்படும் நிலையில், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 3 யானைகள் மட்டும் பந்தயத்தில் பங்கேற்றன. கோயில் வளாகத்தை சுற்றி நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் பாதையின் இருபுறங்களிலும் நின்று ஏராளமானோர் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.
Next Story