ராகுல்காந்தி பேசியது தவறு- காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதிதி சிங்

கேரளா மாநிலம் வயநாடு தொகுதி மக்கள், தங்கள் பிரச்சினைகளை தெளிவாக எடுத்து வைப்பதாகவும், அதன் மீது நல்ல புரிதலுடன் இருப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.
ராகுல்காந்தி பேசியது தவறு- காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதிதி சிங்
x
கேரளா மாநிலம் வயநாடு தொகுதி மக்கள், தங்கள் பிரச்சினைகளை தெளிவாக எடுத்து வைப்பதாகவும், அதன் மீது நல்ல புரிதலுடன் இருப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார். 

கடந்த 15 ஆண்டுகளாக வடமாநிலத்தில் எம்.பி.யாக இருந்ததாகவும், அங்கு அரசியல் ரீதியான பல்வேறு செயல்களை செய்ததாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். கேரளாவில் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், தென்னகம் வந்தவுடன் தனது மனது இலகுவாக இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள,  காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதிதி சிங், தற்போதைய தொகுதியை புகழ்ந்து பேசும்போது, முந்தைய தொகுதியை குறைத்து கூறுவது தவறானது என கூறியுள்ளார். தங்களின் மூதாதையர்கள் வென்ற இடம் அமேதி என்றும், ராகுல்காந்தி அரசியலில் ஏ,பி,சி கற்க உதவியது வடக்கில் இருக்கும் தொகுதிகள்தான் என்று கூறியுள்ள அதிதி சிங், ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்