"காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதிகபட்ச வரி" - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புகார்
சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்
சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது என்றும், இது படிப்படியாக குறையும் எனவும், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்ததும் ஒரு காரணம் என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். பெட்ரோலிய பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரி வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது அதிகபட்ச வரி இருப்பதைசோனியா காந்தி அறிந்திருக்க வேண்டும் என சாடியுள்ளார்.
Next Story