வாக்காளர்களுக்கு லட்டு பிரசாதம் - ஆளும் கட்சி வேட்பாளர்களின் புது முயற்சி

ஆந்திராவின் உள்ளாட்சித் தேர்தலையொட்டி, ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்துடன், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் துண்டு பிரச்சுரம் வழங்கி வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு லட்டு பிரசாதம் - ஆளும் கட்சி வேட்பாளர்களின் புது முயற்சி
x
ஆந்திராவின் உள்ளாட்சித் தேர்தலையொட்டி, ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்துடன், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் துண்டு பிரச்சுரம் வழங்கி வருகின்றனர். ஆந்திராவில் வரும் 27ஆம் தேதி மூன்றாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வாக்காளர்களை கவர்வதற்காக, சித்தூர் மாவட்டம் திருப்பதி அடுத்த தொண்டவாடா கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆளும்  கட்சி வேட்பாளர்கள், துண்டு பிரச்சுரத்துடன் ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் வழங்கி வருகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள், ஆளும் கட்சியின் அராஜகத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்