ரயில் மறியல் போராட்டம்: "பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்தாதீர்கள்" - ரயில்வே துறை அறிவுரை

ரயில் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.
ரயில் மறியல் போராட்டம்: பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்தாதீர்கள் - ரயில்வே துறை அறிவுரை
x
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளில் போராடி வரும் விவசாயிகள், இன்று  பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு தழுவிய அளவில் ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து இந்திய ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் நாளை கூடுதலாக 20 கம்பெனிகள் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாகவும், பஞ்சாப், அரியானா உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்