5 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டம் - மேற்கு வங்க முதல்வர் மம்தா தொடங்கி வைத்தார்

மேற்கு வங்காளத்தில் 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்.
5 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டம் - மேற்கு வங்க முதல்வர் மம்தா தொடங்கி வைத்தார்
x
மேற்கு வங்காளத்தில் 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார். ஹவுராவில் இருந்து காணொலி காட்சி வாயிலாக இந்த திட்டத்தை தொடங்கி வைத்த அவர்,
5 ரூபாய்க்கு அரிசி சாதம், பருப்பு, காய்கறி மற்றும் முட்டைக்கறி கிடைக்கும் என்றும், ஒரு பிளேட் சாப்பாட்டிற்கு மாநில அரசு 15 ரூபாய் மானியமாக வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார். சுய உதவிக்குழுக்களால் மதியம் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த உணவுக்கூடம் இயங்கும் என தெரிவித்த மம்தா பானர்ஜி, படிப்படியாக மாநிலம் முழுவதும் இந்தத் திட்டம் விரிவு படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்