வாட்ஸ்அப் புதிய தனியுரிமை கொள்கை வழக்கு - மத்திய அரசு, வாட்ஸ்அப், பேஸ்புக்-க்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு

வாட்ஸ்அப் புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை விதிக்க கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
x
வாட்ஸ்அப் புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை விதிக்க கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


டெல்லியை சேர்ந்த கர்மான்யா சிங் ஷரீன் என்பவர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஷியாம் திவான், பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதில் வாட்ஸ்அப் நிறுவனம் பாகுபாடு காட்டுகிறது என வாதிட்டார். அப்போது வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நிறுவனங்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், அர்விந்த் தத்தர்,  ஆஜராகி, மக்களின் தகவல்களை  பாதுகாக்க ஐரோப்பாவில் தனிச் சட்டம் உள்ளது என்றும், அது போன்ற சட்டம் இந்தியாவில் இல்லை என கூறினர். மேலும், இந்தியாவிலும் அது போன்ற சட்டத்தை இயற்றினால், அது  கடைப்பிடிக்கப்படும் என வாதிட்டனர். வாதங்களை கேட்ட நீதிபதிகள், அதனை ஏற்பதாக கூறினர். பல கோடி ரூபாய் மதிப்பை விட,  தனிப்பட்ட தகவல்களை மக்கள் பெரிதாக கருதுவதாகவும், தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது தங்களின் கடமை என கூறினர்.  இந்த மனு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசு, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்