புதிய திட்டங்கள் துவக்கம்

சென்னை மெட்ரோ விம்கோ நகர் ரயில் சேவை உள்பட பிரதமர் மோடி தொடங்கி வைத்த பல்வேறு திட்டங்கள் குறித்து தற்போது பார்ப்போம்...
புதிய திட்டங்கள் துவக்கம்
x
சென்னை மெட்ரோ விம்கோ நகர் ரயில் சேவை உள்பட பிரதமர் மோடி தொடங்கி வைத்த பல்வேறு திட்டங்கள் குறித்து தற்போது பார்ப்போம்........

சென்னை வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே 3 ஆயிரத்து 770 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.சென்னை கடற்கரை - அத்திப்பட்டு இடையே 293 கோடியே 40 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட 4வது ரயில் பாதை, Card-3 விழுப்புரம்- கடலூர்- மயிலாடுதுறை -தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை- திருவாரூர் இடையில் 423 கோடி செலவில் மாற்றப்பட்டுள்ள மின்வழித்தடம் உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் ஆரம்பித்து வைத்தார்.அதேபோல்,  உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன அர்ஜுன் மார்க்-1 ஏ கவச வாகனத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.2 ஆயிரத்து 640 கோடியில் கல்லணை கால்வாய் நவீனமயமாக்கல், விரிவாக்கம், புனரமைப்பதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ள சென்னை ஐ.ஐ.டி-யின் டிஸ்கவரி வளாகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 



Next Story

மேலும் செய்திகள்