தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி
நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது பிரதமர் மோடி, பதிலுரை வழங்கினார். அப்போது,
அனைத்து துறைகளிலும் தனியார் துறையின் பங்களிப்பை மக்கள் காண்பதாக குறிப்பிட்டார்.
மனித இனத்திற்கு இந்தியா சேவை செய்ய முடிகிறது என்றால், அதற்கு தனியார் துறையின் பங்களிப்பு காரணம் என பாராட்டு தெரிவித்தார்.
தனியார் துறைக்கு எதிராக தகாத வார்த்தைகளை பயன்படுத்தும் காலம் கடந்து விட்டதாகவும், பிரதமர் கூறினார்.
தனியார் துறையை அவதூறாக பேசும் கலாச்சாரத்தை இனி ஒருபோதும் ஏற்க முடியாது எனவும்,
நாட்டில் இதேபோன்று தூற்றி கொண்டிருக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
பிரதமரின் இந்த பேச்சு மத்திய அரசின் தனியார் மயம் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும்,
தனியார்மயம் குறித்த அரசின் நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.
பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் குறிப்பிட்ட சதவீத பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
அதேபோல் ஏர் இந்தியா நிறுவனத்தையும், சில பொதுத்துறை வங்கிகளையும் இந்த ஆண்டு விற்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story