கல்கா- சிம்லா இடையே மீண்டும் ரயில் போக்குவரத்து - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் கடும் குளிர் நிலவிவருகிறது. காலை, மாலை வேளைகளில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவுவதால் அப்பகுதியே பனியால் சூழப்பட்டு காட்சி அளிக்கிறது.
கல்கா- சிம்லா இடையே மீண்டும் ரயில் போக்குவரத்து - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
x
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் கடும் குளிர் நிலவிவருகிறது. காலை, மாலை வேளைகளில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவுவதால் அப்பகுதியே பனியால்  சூழப்பட்டு காட்சி அளிக்கிறது. இந்நிலையில் குளுமையை ரசிக்க அங்கு சென்றுள்ள சுற்றுலா பயணிகள், பனிபடர்ந்த பகுதிகளில் உற்சாகமாக பொழுதை கழித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் அரியானா மாநிலம் கல்கா பகுதியில் இருந்து சிம்லாவுக்கு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கி உள்ளது. பெரும்பாலும் மலை பகுதிகளை கடந்து செல்லும் இந்த வழித்தடத்தில் செல்லும் பயணிகள் இயற்கை காட்சிகளை ரசித்தபடி செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்