71வது நாளாக விவசாயிகள் போராட்டம்- நேரில் சென்று ஆதரவு தெரிவித்த தமிழக எம்.பிக்கள்

டெல்லி எல்லைப்பகுதியான காசிப்பூரில், போராட்டம் நடத்தி வரும், விவசாயிகளை, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்தித்து பேசியுள்ளனர்.
x
திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து காசிப்பூரில், விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 71 வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் பிரச்சனைகள் மற்றும் குறைகள் குறித்து அறிய, காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாத்திலிருந்து, பேருந்து ஒன்றில் பயணித்தனர். பின்னர், காசிப்பூரை அடைந்த திருச்சி சிவா, கனிமொழி, திருமாவளவன், சு. வெங்கடேசன், சுப்ரியா சுலே, ஹர்சிம்ரத் கவுர் பாதல், சவுகதா ராய் உள்ளிட்டோர், விவசாயிகளை சந்திக்க முற்பட்டனர். அப்போது போலீசார் அனுமதி மறுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், சிறிது நேரத்திற்கு பிறகு எம்.பி.க்கள், விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்