பாலியல் புகார்; சிறைக்கு அனுப்பியதால் ஆத்திரம் - கோடாரியால் கொடூரமாக தாக்கும் காட்சிகள்

பாலியல் புகாரில் சிறைக்கு அனுப்பியதால் ஆத்திரம் அடைந்த இளைஞர் ஒருவர் கோடாரியால் பெண்ணை வெட்டிச் சாய்த்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் புகார்; சிறைக்கு அனுப்பியதால் ஆத்திரம் - கோடாரியால் கொடூரமாக தாக்கும் காட்சிகள்
x
பாலியல் புகாரில் சிறைக்கு அனுப்பியதால் ஆத்திரம் அடைந்த இளைஞர் ஒருவர் கோடாரியால் பெண்ணை வெட்டிச் சாய்த்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

பார்ப்போரை பதற வைக்கும் இந்த சம்பவம் தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கொர்லகுண்டா என்ற பகுதியில் அரங்கேறி இருக்கிறது.

தாக்குதலுக்கு ஆளான பெண்ணின் பெயர் விமலா. கடந்த ஒரு ஆண்டுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்துள்ளது. இதனிடையே அதே பகுதியை சேர்ந்த ராகுல் தோட் என்பவர் விமலாவிற்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டல் விடுத்துள்ளார். 

பொறுத்து பார்த்த விமலா, ஒரு கட்டத்திற்கு மேல் தன் வீட்டில் இருப்பவர்களிடம் விஷயத்தை சொல்லி, ராகுல் தோட் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் அளித்த புகாரின் பேரில் ராகுல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

நிர்பயா சட்டத்தின் கீழ் ராகுல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தன்னை சிறைக்கு அனுப்பியதால் கடும் கோபத்தில் இருந்த ராகுல், ஜாமீனில் வெளியே வந்ததும், கோடாரியுடன் விமலா வீட்டிற்கு சென்றார். வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த விமலா, சுதாரிப்பதற்குள், தான் வைத்திருந்த கோடாரியை எடுத்து சரமாரியாக வெட்ட தொடங்கினார். 

கோபம்  தீரும் வரை வெட்டிவிட்டு தப்பியோடி தலைமறைவானார் ராகுல். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விமலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவத்திற்கு ராகுலுக்கு உதவியாக மேலும் 2 பேர் இருந்தது தெரியவந்ததை தொடர்ந்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெண்ணை கொடூரமாக தாக்கிய ராகுலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்