"இலங்கை தமிழர்கள் நலனில் உறுதி" - வெளியுறவு இணைஅமைச்சர் கருத்து

இலங்கையில் வாழும் தமிழர்கள் நலனை பாதுகாப்பது தொடர்பாக அந்நாட்டு அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்கள் நலனில் உறுதி - வெளியுறவு இணைஅமைச்சர் கருத்து
x
இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு குறித்து திமுக மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம் எழுப்பியிருந்த கேள்விக்கு வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், கடந்த செப்டம்பர் மாதம் இந்திய இலங்கை பிரதமர்கள் இடையே நடைபெற்ற காணொலி கூட்டத்தின் போதும் இலங்கையில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து வலியுறுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை சென்ற போதும், தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், 13வது சட்டத்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் வலியுறுத்தியதாக முரளிதரன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்