"இந்தியாவின் சொத்துக்களை விற்பதா ?" - மத்திய அரசின் முடிவுக்கு ராகுல் எதிர்ப்பு
மக்களின் கரங்களுக்கு பணப்புழக்கத்தை கொண்டு வருவதற்கு பதிலாக இந்தியாவின் சொத்துக்களை பிரதமர் மோடி தமக்கு நெருக்கமான பணக்கார நண்பர்களுக்கு விற்க திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களின் கரங்களுக்கு பணப்புழக்கத்தை கொண்டு வருவதற்கு பதிலாக இந்தியாவின் சொத்துக்களை பிரதமர் மோடி தமக்கு நெருக்கமான பணக்கார நண்பர்களுக்கு விற்க திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மத்திய பட்ஜெட் குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், இதனை தெரிவித்துள்ளார். முன்னதாக பொதுத்துறைக்கு சொந்தமான பாரத் பெட்ரோலியம் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Next Story