ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க முயற்சி - ஏர் இந்தியாவை வாங்க விரும்பும் டாடா
இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் பெரும் கடன் சுமையிலும் தடுமாறி வருவதால், அதனை விற்பனை செய்ய சமீபத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.
இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் பெரும் கடன் சுமையிலும் தடுமாறி வருவதால், அதனை விற்பனை செய்ய சமீபத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. டாடா குழுமம் உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் இதற்கான விருப்ப மனுக்களை சமர்பித்திருந்தன. டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏர் ஏசியா இந்தியா மற்றும் விஸ்தாரா ஆகிய இரண்டு விமான சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஏர் இந்தியாவை வாங்குவதில் சிங்கப்பூர் எர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஆர்வமில்லை என்று கூறப்படுகிறது,. கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள இந்தத் துறையில், புதிய முதலீடுகளை செய்ய சிஙகப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.
Next Story