குடியரசு தினத்தில் டெல்லி நகரில் டிராக்டர் பேரணிக்கு போலீஸ் அனுமதி

விவசாய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தினத்தில் டெல்லி நகரில் டிராக்டர் பேரணி நடத்த போலீஸ் அனுமதி அளித்திருப்பதால் விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
குடியரசு தினத்தில் டெல்லி நகரில் டிராக்டர் பேரணிக்கு போலீஸ் அனுமதி
x
விவசாய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தினத்தில் டெல்லி நகரில் டிராக்டர் பேரணி நடத்த போலீஸ் அனுமதி அளித்திருப்பதால் விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று விவசாய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடர்கின்றனர்.விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 11 கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. விவசாய சட்டங்களை நிறுத்திவைப்பதாக மத்திய அரசு, அறிவித்ததை விவசாயிகள் தரப்பு நிராகரித்தது. பெருநிறுவனங்களுக்கு சாதகமாகவே விவசாய சட்டங்கள் திருப்பதால் அவற்றை திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் தரப்பு பிடிவாதமாக உள்ளது.குடியரசு தினத்தில் டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவதாக அறிவித்துள்ளனர்.  அந்தப் போராட்டத்திற்கு டெல்லி போலீஸ் நேற்று அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து,  டிராக்டர் பேரணியில் பங்கேற்பதற்காக ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 


Next Story

மேலும் செய்திகள்