மத்திய அரசை பார்த்து எனக்கு பயமில்லை - ராகுல்காந்தி

மத்திய அரசைப் பார்த்து தனக்கு பயம் இல்லை என்றும், தன்னை யாராலும் ஒருபோதும் தொட முடியாது எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசை பார்த்து எனக்கு பயமில்லை - ராகுல்காந்தி
x
மத்திய அரசைப் பார்த்து தனக்கு பயம் இல்லை என்றும், தன்னை யாராலும் ஒருபோதும் தொட முடியாது எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், மூன்று வேளாண் சட்டங்களை விளக்கும் கையேட்டினை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் 60 சதவீதம் மக்கள் விவசாய பணிகளை மேற்கொண்டிருப்பதாகவும், விவசாயத்தை முற்றிலுமாக அழிக்கவே வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.  

மேலும், பிரதமர் மோடிக்கு நெருக்கமாக உள்ள சில முதலாளிகள் மட்டுமே நாட்டை கட்டுப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மட்டுமே தீர்வு என்றார். தொடர்ந்து பேசியவர், மத்திய அரசைப் பார்த்து தனக்கு பயமில்லை என்றதோடு, அவர்கள் தன்னை சுட்டுக் கொல்லலாம்.. ஆனால், தொட முடியாது எனவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்