மாநிலங்களில் தடுப்பூசி திட்டம்...!
நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் அம்மாநில முதலமைச்சர்கள் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. பலராம்பூர் மருத்துவமனையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தடுப்பூசி வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் தலைநகர் மும்பை மருத்துவமனையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் மருத்துவமனையில் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அங்கு சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
Next Story