சிக்னல் செயலி செயல்பாட்டில் தொய்வு - பயனாளர்கள் அதிருப்தி
உலகம் முழுவதும் புது கவனம் பெற்றிருக்கும் சிக்னல் செயலியின் செயல்பாட்டில் தொய்வு காணப்பட்டதால் பயனாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
அவர்களால் தங்களுடைய குறுஞ்செய்தியை பிறருக்கு அனுப்ப முடியவில்லை என டுவிட்டர்களில் புகார்களை பதிவு செய்தனர். இந்நிலையில் செயலியின் செயல்பாட்டு வேகத்தை கூட்ட சர்வர்கள் இணைக்கப்படுவதாகவும், அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story