சீனாவின் கள்ளச்செயலி விவகாரம் - சீனாவுக்கு தப்பிச் சென்ற ஹாங்க்
சீனாவின் கள்ளச்செயலி விவகாரத்தில் தப்பிச் சென்றவரை பிடிக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.
சீனாவின் ஆன்லைன் கந்துவட்டி செயலி விவகாரத்தில் 2 சீனர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை கைது செய்வதற்கு முன்பாக ஹாங்க் என்பவர் சீன நாட்டுக்கு தப்பிச் சென்றதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் இவர் மூளையாக செயல்பட்டவர் எனவும் கூறப்பட்ட நிலையில் தப்பிய இவர் சீனாவில் இருப்பதும் உறுதியானது. இதையடுத்து அவரை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டதோடு மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக இண்டர் போல் உதவியை நாட உள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலிசார் தெரிவித்துள்ளனர்
Next Story