பிரிட்டனுக்கு மீண்டும் விமான சேவை - பெங்களூரு வந்த முதல் விமானம்

பிரிட்டனில் இருந்து பெங்களூரு வந்த பயணிகளுக்கு கொரோனா தொற்று இல்லாத நிலையில், 15 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
பிரிட்டனுக்கு மீண்டும் விமான சேவை - பெங்களூரு வந்த முதல் விமானம்
x
பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும் நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் 8 ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்ட முதல் விமானம் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தது. அதிலிருந்த பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தாலும், அவர்களுக்கு மத்திய அரசின்  விதிகளுக்கு உட்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா இல்லை என முடிவு தெரியவந்ததும், 15 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தி அதிகாரிகள் கையில் முத்திரையிட்டு அனுப்பினர். 

Next Story

மேலும் செய்திகள்