மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலி - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சந்திப்பு
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள சவுரவ் கங்குலியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள சவுரவ் கங்குலியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி , கங்குலி நலமுடன் உள்ளதாகவும், அவர் தம்மிடம் பேசியதாகவும் கூறினார். மருத்துவர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்து கொண்டதாகவும் மம்தா பானர்ஜி தெரிவிதார். முன்னதாக மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்ஹரும் மருத்துவமனைக்கு சென்று கங்குலியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். முன்னதாக, சவுரவ் கங்குலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story