கொரோனா தடுப்பூசி ஒத்திகை - நாடு முழுவதும் 259 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி ஒத்திகை டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் தொடங்கியது. தா்யாகஞ்சில் உள்ள MCW மருத்துவமனை, ஜிடிபி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
கொரோனா தடுப்பூசி ஒத்திகை - நாடு முழுவதும் 259 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
x
கொரோனா தடுப்பூசி ஒத்திகை டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் தொடங்கியது. தா்யாகஞ்சில் உள்ள MCW மருத்துவமனை, ஜிடிபி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மாவட்ட மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. இதில் சுகாதாரப் பணியாளர்களின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டன.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நம்பள்ளி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கியது. மேலும் ஐதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதேபோல் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள பன்நோக்கு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கியது. இதில் கொரோனா தடுப்பூசி போடும் போது செய்ய வேண்டிய நடைமுறை குறித்து ஒத்திகை செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்