அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா - கட்டுப்பாடுகளுடன் நடத்த மத்திய அரசு திட்டம்?

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா - கட்டுப்பாடுகளுடன் நடத்த மத்திய அரசு திட்டம்?
x
கொரோனா பெருந்தொற்று உலகையை ஆட்டிப்படைத்த நிலையில், இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால், குடியரசுத்தலைவர், பிரதமர் முதல் அனைவரது வெளிநாட்டு பயணமும் ரத்து செய்யப்பட்டது.இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் சுதந்திர தின விழா, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குறைந்த பார்வையாளர்களை வைத்தே நடைபெற்றது.இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தினத்தை, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த, மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. வழக்கம் போல், 8.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெறும் அணிவகுப்பு, 3.3 கிலோமீட்டர் தொலைவுக்கு மட்டும் அணிவகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதோடு, குறைந்த அளவு பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்