"உள்நாட்டு பொருளை வாங்க உறுதி ஏற்போம்" - பிரதமர் மோடி

உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க உறுதி ஏற்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்
உள்நாட்டு பொருளை வாங்க உறுதி ஏற்போம் - பிரதமர் மோடி
x
மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் உலகளவில் சென்று சேர வேண்டும் என்று தெரிவித்தார்.உள்ளூர் பொருட்களின் தரத்தில் எந்த சமரசமும் செய்ய கூடாது என தெரிவித்த பிரதமர் மோடி,

நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்க உறுதி ஏற்போம் என்று தெரிவித்தார்.மேலும், நாம் பயன்படுத்தும் அந்நிய பொருட்களை கணக்கெடுக்க வேண்டும் என்றும்,அவற்றிற்கு மாற்றான இந்திய பொருட்களை கண்டறிந்து பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறினார்...2014ஆம் ஆண்டில் மொத்தமே ஏழாயிரத்து 900 சிறுத்தைகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது, 12 ஆயிரத்து 852 ஆக அதிகரித்துள்ளது

இந்தியாவில் வனங்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்