"விவசாயிகள் தங்கள் பிரச்சினைகளை பேசி தீர்க்க முன்வர வேண்டும்" - உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு

புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் தங்கள் பிரச்சினைகளை பேசி தீர்க்க முன்வர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
விவசாயிகள் தங்கள் பிரச்சினைகளை பேசி தீர்க்க முன்வர வேண்டும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு
x
அசாமில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், வடகிழக்கு மாநிலங்களில், பிரிவினைவாதிகள், இளைஞர்களின் கைகளில் ஆயுதங்களை கொடுக்கும் ஒரு காலம் இருந்தாக குறிப்பிட்டார். அனைத்து ஆயுதக் குழுக்களும் பிரதான நீரோட்டத்தில் சேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். போடோலாந்து  ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம், அசாமில் அமைதியை நிலைநாட்டும் பணியை மோடி அரசு தொடங்கியுள்ளதாக குறிப்பிட்ட அமித்ஷா, வளர்ச்சி மற்றும் கருத்தியல் மாற்றம் தேவை என்று வலியுறுத்தினார். தற்போது டெல்லியில் போராடி வரும் விவசாயிகள், தங்கள் பிரச்சினைகளை பேசி  தீர்க்க முன் வரவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.



Next Story

மேலும் செய்திகள்