பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியுதவி

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை பிரதமர் மோடி விடுவித்தார்.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியுதவி
x
வாஜ்பாயின் பிறந்த நாளை ஒட்டி, கிசான் சம்வாத் என்ற நிகழ்ச்சி மூலம் 6 மாநில விவசாயிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில், பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் சுமார் 9 கோடி விவசாய குடும்பங்களுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை பிரதமர் மோடி விடுவித்தார். இதன் மூலம் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2 ஆயிரம் ரூபாய் வீதம், 3 தவணையாக நிதி வழங்கப்பட உள்ளது. அதன்படி பிரதமரின் கிசான் திட்டம் மூலம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்