ஆந்திரவில் வங்கி பெண் ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை

ஆந்திராவில் வேலை முடிந்து வீடு திரும்பிய பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற சம்பவம் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
ஆந்திரவில் வங்கி பெண் ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை
x
ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 16 நாட்களுக்கு முன்பாக வங்கியின் கிரெடிட் கார்டு சேவை மையத்தில் ஒப்பந்த ஊழியராக வேலைக்கு சேர்ந்துள்ளார். இதற்காக தர்மவரம் சென்று வந்த அந்த பெண் சம்பவத்தன்று பணி முடிந்து மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. மகளை காணாமல் தவித்து வந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. ஏற்கனவே கார்த்தி மற்றும் ராஜேஷ் ஆகியோரால் தங்கள் மகளுக்கு துன்புறுத்தல் இருப்பதாக புகார் அளித்திருந்தும் போலீசார் அதை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே தர்மபுரம் சாலையில் மாயமான அந்த இளம்பெண் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனிடையே பெண்களின் பாதுகாப்பிற்கு அரசின் அலட்சியமே காரணம் என தெலுங்கு தேச கட்சி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் ராஜேஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்