கேரளாவில் ஜனவரியில் கல்லூரிகள் திறப்பு: இரண்டு ஷிப்ட்களாக வகுப்புகள் நடத்தலாம் - கல்லூரி நிர்வாகங்களுக்கு அரசு சுற்றறிக்கை

கேரளாவில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் கல்லூரிகளை திறப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் ஜனவரியில் கல்லூரிகள் திறப்பு: இரண்டு ஷிப்ட்களாக வகுப்புகள் நடத்தலாம் - கல்லூரி நிர்வாகங்களுக்கு அரசு சுற்றறிக்கை
x
மாநிலத்தில் அரசு கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் போன்றோர் வரும் 28 ஆம் தேதி முதல் கல்லூரிகளுக்கு வர வேண்டும் எனவும் காலை எட்டு 30 மணி முதல் மாலை ஐந்து 30 மணி வரையில் கல்லூரிகள் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு 5 மணி நேரம் வகுப்புகள் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ள அரசு, தேவைப்படுமாயின் 2 ஷிப்ட்களாக வகுப்புகள் நடத்தலாம் என அரசு கல்லூரி நிர்வாகங்களை கேட்டுக் கொண்டுள்ளது.    சனிக்கிழமைகளிலும் கல்லூரி செயல்படலாம் எனவும் செமஸ்டர் அடிப்படையில் 50 சதவீத மாணவர்களுக்கு சுழற்சி அடிப்படையில் வகுப்புகள் நடத்தலாம் எனவும் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஐந்தாவது மற்றும் ஆறாவது செமஸ்டர் மாணவர்கள் மற்றும் முதுகலையில் அனைத்து பிரிவு மாணவர்களும் வகுப்புகளில் அனுமதிக்கலாம் எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்