பிரிட்டனில் இருந்து வந்த பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தல்

பிரிட்டனில் இருந்து இந்திய வந்த பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பிரிட்டனில் இருந்து வந்த பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தல்
x
பிரிட்டனில் இருந்து இந்திய வந்த பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவ தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது, முதன் முதலாக பிரிட்டன் நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதால், அங்கிருந்து இந்தியா வரும் பயணிகள், தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.  நவம்பர் 25 -ம் தேதி முதல் டிசம்பர் 8-ம் வரை வந்த பயணிகளுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 9 முதல் 25-ம் தேதி வரை இந்தியா வந்துள்ள பயணிகள்,  நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்