2021, ஜனவரி 14-ல் தொடங்கும் கும்பமேளா விழா - முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்

வழக்கமான உற்சாகத்துடன் 2021 ஆம் ஆண்டு கும்பமேளா நடைபெறும் என உத்தராகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.
2021, ஜனவரி 14-ல் தொடங்கும் கும்பமேளா விழா - முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்
x
வரும் ஜனவரி 14 ஆம் தேதி தொடங்க உள்ள கும்பமேளாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக நேற்று  அகில பாரதிய அகர் பரிசத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, கொரோனா சூழலைப் பொறுத்து கும்பமேளா காலம் முடிவு செய்யப்படும் எனவும் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கும்பமேளாவிற்காக புதிதாக 9 படித்துறைகள், 8 பாலங்கள் மற்றும் புதிய சாலைகள் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளதாக, கும்பமேளா சிறப்பு அதிகாரி தீபக் ராவத் தெரிவித்துள்ளார். கும்பமேளா காலத்தில் நாள் ஒன்றுக்கு 35 லட்சம் முதல் 50 லட்சம் பேர் வரை புனித நீராடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்