ரூ.320 கோடி செலவில் உணவு பதப்படுத்துதல் துறை திறனை மேம்படுத்த புதிய திட்டங்கள்

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உணவு பதப்படுத்துதல் துறையில் திறனை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.320 கோடி செலவில் உணவு பதப்படுத்துதல் துறை திறனை மேம்படுத்த புதிய திட்டங்கள்
x
தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உணவு பதப்படுத்துதல் துறையில் திறனை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்தின் கீழான உணவு பதப்படுத்துதல் பாதுகாப்பு திறன்களை உருவாக்குதல் மற்றும் விரிவாக்கம் செய்தல்  என்னும் திட்டத்தின் கீழ் 320 கோடி ரூபாய் செலவில் 28 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர்  நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவின் கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார்10 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
, மேலும், இந்தத் திட்டங்களின் மூலம் தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர்,  மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயிரத்து 237 மெட்ரிக் டன் அளவில் பதப்படுத்துதல் திறன்கள் உருவாக்கப்படும்.

Next Story

மேலும் செய்திகள்