ரூபே டெபிட் கார்டு திட்டத்தின் 2-ம் கட்டம் - பிரதமர் மோடி, பூடான் பிரதமர் தொடங்கி வைத்தனர்
பூடானில் ரூபே டெபிட் கார்டு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
பூடானில் ரூபே டெபிட் கார்டு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்தியாவின் ரூபே டெபிட் கார்டை பூடானில் பயன்படுத்தும் முறையை கடந்த 2019-ம் ஆண்டு பூடானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில் திட்டத்தின் 2-ம் கட்டமாக பூடான் சுற்றுலா பயணிகள் ரூபே கார்டை இந்தியாவில் பயன்படுத்தும் முறை செயல் படுத்தப்பட்டது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் பூடான் பிரதமர் லயன்சென் டாக்டர் லோட்டே கூட்டாக இணைந்து திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
Next Story