உத்தர பிரதேசத்தில் லாரி, கார் மோதல் - 6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், 6 குழந்தைகள் உள்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தர பிரதேசத்தில் லாரி, கார் மோதல் - 6 குழந்தைகள் உட்பட 14 பேர்  உயிரிழப்பு
x
உத்தரபிரதேச மாநிலம், பிரதாப்கர் அருகே தேஷ்ராஜ் இனாரா கிராமத்தில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் முற்றிலும் உருக்குலைந்த நிலையில், அதிலிருந்த 6 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்.பி. அனுராக் ஆர்யா தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்