இந்திய பாதுகாப்புப் படையினரின் தீவிர கண்காணிப்பால் காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளின் அத்துமீறல் முறியடிப்பு

இந்திய பாதுகாப்புப் படையினரின் தீவிர கண்காணிப்பால், காஷ்மீர் எல்லைக்குள் தீவிரவாதிகள் அத்துமீறி நுழைவது குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பாதுகாப்புப் படையினரின் தீவிர கண்காணிப்பால் காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளின் அத்துமீறல் முறியடிப்பு
x
காஷ்மீரில் உள்ள நக்ரோட்டா மாவட்டத்தில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்ட நான்கு தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழையும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 38 சதவீதம் குறைந்திருப்பதாக, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலில், நடப்பாண்டில் தற்போது வரை 77 தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைய முயன்றதாகவும், 24 பேர் விரட்டியடிக்கப்பட்டு 17 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், வழக்கமாக அக்டோபர் மாதங்களில் தீவிரவாதிகளின் அத்துமீறல் அதிகரிக்கும் நிலையில், இந்த ஆண்டு அது முற்றிலுமாக தடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்