இந்தியா - லக்சம்பர்க் இடையே காணொலி உச்சி மாநாடு : பிரதமர் நரேந்திர மோடி, லக்சம்பர்க் பிரதமர் சேவியர் பெத்தேல் பங்கேற்பு

காணொலி மூலம் நடைபெற்ற, இந்தியா-லக்சம்பர்க் இருதரப்பு உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்தியா - லக்சம்பர்க் இடையே காணொலி உச்சி மாநாடு : பிரதமர் நரேந்திர மோடி, லக்சம்பர்க் பிரதமர் சேவியர் பெத்தேல் பங்கேற்பு
x
கொரோனாவால், லக்சம்பர்க்கில் உயிரிழந்தவர்களுக்கு அவர் அஞ்சலி செலத்தினார். பின்னர் பேசிய பிரதமர் மோடி,  கொரோனா நெருக்கடியை கையாள்வதில் லக்சம்பர்க் பிரதமர் சேவியர் பெத்தேலின் தலைமையை பாராட்டினார். இந்த மாநாட்டில்  தொழில்நுட்பம், வானியல் செயல்பாடுகள், டிஜிட்டல் புதுமைகள் மற்றும் புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) ஆகிய துறைகளில் கோவிட்டுக்கு, பிந்தைய உலகில் இந்தியா மற்றும் லக்சம்பர்க்குக்கிடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக்கொண்டார்கள். கொவிட்-19 பெருந்தொற்று, தீவிரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட சர்வதேச சவால்களை எதிர்கொள்ளுதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு பிரதமர்களும் ஒப்புக் கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்