உதம்பூர் அருகே பதுங்கிய தீவிரவாதிகள் - அதிகாலையில் சுற்றி வளைத்த பாதுகாப்பு படை

ஜம்மு, காஷ்மீரில் இன்று அதிகாலை நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.
உதம்பூர் அருகே பதுங்கிய தீவிரவாதிகள் - அதிகாலையில் சுற்றி வளைத்த பாதுகாப்பு படை
x
ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட உதம்பூரை அடுத்த நாக்ரோட்டா என்னுமிடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், பான் சோதனை சாவடி அருகே  தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே அதிகாலையில் மோதல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஜம்மு, ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஜெ​ய்ஸே இ முகமது அமைப்பை சேர்ந்த 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக,  டி.ஜி.பி. தெரிவித்துள்ளார். மேலும், இந்த சண்டையில் படுகாயம் அடைந்த ஒரு தலைமைக் காவலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் இடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்