அரியானாவில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று - 8 ஆசிரியர்களுக்கும் பரவியது

அரியானா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானாவில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று - 8 ஆசிரியர்களுக்கும் பரவியது
x
அரியானாவில் சில நாட்களுக்கு முன்னர் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது அங்கு பண்டிகை காலம் முடிந்து மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வரத் தொடங்கி உள்ளனர். இந்நிலையில் ஜிந்த் மாவட்டத்தில் பள்ளியொன்றில் 11 மாணவர்களுக்கும், 8 ஆசிரியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ரேவாரியிலும் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் பள்ளிகளில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க மாநில உத்தரவிட்டுள்ளது. மேலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்