அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து - போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

டெல்லி காந்திநகர் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள துணிக்கடை மற்றும் அதை ஒட்டிய குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து - போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்
x
டெல்லி காந்திநகர் பகுதியில், அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள துணிக்கடை மற்றும் அதை ஒட்டிய குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. துணி குடோன் என்பதால், மளமளவென தீ பரவி, அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனைத் தொடர்ந்து,  தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். மேலும், முதற்கட்ட விசாரணையில், மின் கசிவால், தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்