வாத்து மேய்க்கும் பணிக்கு சென்ற சிறுமிகள் பாலியல் பலாத்காரம் - தனிப்படை போலீசாரிடம் சிக்கியவர்களிடம் தொடரும் விசாரணை

வாத்து பண்ணையில் வேலை பார்த்த 5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 6 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
வாத்து மேய்க்கும் பணிக்கு சென்ற சிறுமிகள் பாலியல் பலாத்காரம் - தனிப்படை போலீசாரிடம் சிக்கியவர்களிடம் தொடரும் விசாரணை
x
புதுச்சேரியை அடுத்த சாத்தமங்கலம் பகுதியில் கன்னியப்பன் என்பவர் வாத்து பண்ணை நடத்தி வருகிறார். இவரது பண்ணையில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சிறுமிகள் பலரும் வேலை பார்த்து வந்தனர். இதில் 6 முதல் 14 வயது வரை உள்ள 5 சிறுமிகள் 2 வருடங்களுக்கும் மேலாக தங்கி வாத்து மேய்த்து வந்துள்ளனர். இவர்களை 6 பேர் கொண்ட கும்பல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பண்ணையில் வைத்தே சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில் தனிப்படை போலீசார் வாத்து பண்ணை உரிமையாளர் கன்னியப்பன் உட்பட 6 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்