கேரளா தங்க கடத்தல் வழக்கு விவகாரம் - கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜெலீலுக்கு நோட்டீஸ்
கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு கேரள அமைச்சர் ஜலீலுக்கு சுங்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் பெரும் பூதாகரமாகியது. இந்த கடத்தலின் பின்னணியில் மிகப்பெரும் புள்ளிகள் இருப்பது விசாரணையில் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்தில் அரசின் நெறிமுறை விதிகளை மீறி துபாயில் இருந்து தூதரக பார்சல்கள் மூலமாக பேரிச்சம் பழங்கள், மத சார்புள்ள நூல்களை அனுப்பியது தொடர்பாக கேரள உயர்கல்வி அமைச்சர் ஜலீலிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டர். இந்நிலையில் சுங்கத்துறை அதிகாரிகளும் அவரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். விசாரணைக்காக வரும் திங்கட்கிழமை கொச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு ஜெலீலுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
Next Story