இன்று மாலை இந்தியா வரும் மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள்

இந்திய விமானப் படைக்கு வலு சேர்க்கும் வகையில் பிரான்ஸிலிருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று மாலை இந்தியா வந்து சேர்கின்றன.
இன்று மாலை இந்தியா வரும் மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள்
x
59 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. அதிநவீன தொழில் நுட்பங்களுடன் பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக ரஃபேல் போர் விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. வானிலிருந்தே இலக்கைக் குறிவைத்துத் தாக்குதல், ஏவுகணை இடைமறித்துத் தாக்குதல் போன்ற அதிநவீன அம்சங்கள் ரஃபேல் விமானத்தில் உள்ளன. ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக 5 விமானங்கள் கடந்த ஜூலை மாதம் 29-ஆம் தேதி இந்தியா வந்தடைந்தன. அந்த விமானங்கள் முறைப்படி இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டன. இந்த நிலையில், பிரான்ஸில் இருந்து மேலும், 3 ரஃபேல் விமானங்கள் 8 மணி நேரம் இடைநில்லாமல் பயணித்து இன்று மாலை இந்தியா வந்தடைய உள்ளன. இதன் மூலம் இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரிக்கும்.


Next Story

மேலும் செய்திகள்